ஆனால் அது சரி செய்யக்கூடியது தான் . அதற்காக இப்படி உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டு விரத்தியாக மாறி விடாதீர்கள் . கூல் மச்சி : ஒரு நாள் சந்தோஷமாக கழிய வேண்டும் என்று தான் நாம எப்பவும் நினைத்துக் கொண்டே இருப்போம் . ஆனால் திடீரென்று எங்கிருந்தோ வரும் பிரச்சனைகள் நமக்காகவே செய்து வைத்தது போல , வந்து நம்மை மொத்தமா டிஸ்டர்ப் ஆக்கிவிட்டு சென்று விடுகிறது . சில நேரம் காலை விடிந்ததும் வீட்டில் தொடங்கி விடுகிறது . சில நேரம் அலுவலகத்திலோ அல்லது நண்பர்கள் மூலமாகவோ , உறவினர்கள் மூலமாகவோ தொடர்ந்து பிரச்சனைகள் வரத்தான் செய்யும் . ஆனால் அதற்காக நாம் விரக்தியாக இருந்தால் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை . நோ பீலிங் : எப்போதும் எது நடந்தாலும் நன்மைக்கே என்பதை மட்டும் நாம மனசுக்குள்ள ஆழமா விதைத்து விட வேண்டும் . எதுவும் நிரந்தரமில்லை . கவலைகளாக இருந்தாலும் சரி , சந்தோஷமாக இருந்தாலும் சரி , அடுத்தடுத்து பிரச்சனைகள் வந்தாலும் சரி , எல்லாமே அடுத்த நொடி சரியாகிவிடும் , மாறிவிடு...
கருத்துகள்
கருத்துரையிடுக