AI உலகில் ஆதிக்கம் செலுத்தும் திறனுள்ள 100 நபர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் 13 இந்தியர்களும் இடம்பெற்றிருக்கின்றன

 

AI தொழில்நுட்ப உலகில் ஆதிக்கம் செலுத்தும் 100 நபர்கள் பட்டியலில் இடம்பெற்ற 13 இந்தியர்கள்!

               

            AI உலகில் ஆதிக்கம் செலுத்தும் திறனுள்ள 100 நபர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் 13 இந்தியர்களும் இடம்பெற்றிருக்கின்றன. யார் அவர்கள், எப்படி AI-யின் வளர்ச்சியில் பங்கு வகிக்கிறார்கள்?

                செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பம் படுவேகமாக வளர்ந்து வரும் நிலையில், அதன் வளர்ச்சிக்கும், அதன் மாற்றத்திற்கும், அதன் பயன்பாட்டிற்கும் உருவம் கொடுத்து வரும் டாப் 100 மனிதர்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது டைம் இதழ்.

இந்தப் பட்டியலில் AI தொழில்நுட்பத்தை உருவாக்குபவர்களில் இருந்து, அதனை மக்களிடம் கொண்டு சேர்ப்பவர்கள், அதன் தவறான பயன்பாட்டை எதிர்த்து போராடுபவர்கள் வரை பலருடைய பெயரும் இடம்பெற்றிருக்கிறது.

வருங்காலத்தை செதுக்கப்போகும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினைச் செதுக்கும் திறன் கொண்ட 100 நபர்கள் கொண்ட இந்தப் பட்டியலில் 13 இந்தியர்களின் பெயர்களும் இடம் பெற்றிருக்கிறது. அவர்கள் யார் யாரெனப் பார்க்கலாம்.

சுந்தர் பிச்சை, கூகுள்:

AI வளர்ச்சியினைத் வெளி உலகுக்குத் தொடங்கி வைத்தது ஓபன்ஏஐ தான் என்றாலும், தற்போது அதனைக் கொண்டு செலுத்திக் கொண்டிருப்பது கூகுள் தான். மக்களின் அன்றாட வாழ்க்கையில் AI-யின் பயன்பாட்டைக் தொடங்கி வைத்த சுந்தர் பிச்சை முதல் நபராக இந்தப் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்.

சத்யா நாதெல்லா, மைக்ரேசாஃப்ட்:


 

                பார்டு, ஜெமினி என கூகுள் ஒருபுறம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினை மேம்படுத்தி வந்தாலும், மறுபுறம் ஓபன்ஏஐயுடன் இணைந்து பிங்ஏஐ மற்றும் கோபைலட் என மைக்ரோசாஃப்டும் தன் பங்கிற்து செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினை செதுக்கி வருகிறது. எனவே, மைக்ரோசாஃப்டை வழிநடத்தி வரும் சத்யா நாதெல்லாவும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்.

ரோகித் பிரசாத், அமேசான்:


 

                AI தொழில்நுட்பத்தைக் கடந்து, AGI (Artificial General Intelligence) எனக் குறிப்பிடப்படும் அதனினும் மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டு தங்களுடைய செயல்பாடுகளை மேம்படுத்தி வருகிறது அமேஸான். அந்த மேம்பாட்டுத் திட்டத்தில் ஈடுபட்டிருக்கும் குழுவை முன்னின்று வழிநடத்தி வருகிறது ரோகித் பிரசாத். அமேஸான் சிஇஓ ஆண்டி ஜாஸியின் கீழ் நேரடியாக செயல்பட்டு வருகிறார் இவர்.

அர்விந்த் ஸ்ரீநிவாஸ், பெர்ப்லெக்ஸிட்டி AI:

                AI தொழில்நுட்பம் ஜாம்பாவான்கள் விளையாடும் களம் மட்டுமல்ல. சிறிய நிறுவனங்களுக்கு அதில் பங்கு இருக்கிறது. அதற்கான உதாரணம் அர்விந்த் ஸ்ரீநிவாஸின் பெர்ப்லெக்ஸிட்டி AI (Perlexiity AI). கேள்வி பதில் வழிமுறையில் AI மூலம் நாம் பதில்களைப் பெற இந்தத் தளத்தை நாம் பயன்படுத்தலாம். இதன் செயலி வடிவமும் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ளது.

 

 

ஷிவ் ராவ், அபிரிட்ஜ்:

                AI என்பது தொழில்நுட்பம் சார்ந்த தொழில்நுட்பம் மட்டுமல்ல. தொழில்நுட்ப உலகைக் கடந்து, பல்வேறு துறைகளிலும் அதன் பங்களிப்பு தேவையாக இருக்கிறது. மருத்துத் துறையில் அப்படி செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பை அளித்து வருகிறது ஷிவ் ராவின் அபிரிட்ஜ் (Abridge) நிறுவனம். மெடிக்கல் ஸ்கிரைப் எனப்படும், மருத்துவ ஆவணப்படுத்தலை AI மூலம் எளிமையாக்கியிருக்கிறது அபிரிட்ஜ்.

ஆனந்த் விஜய் சிங், ப்ரோட்டான்:

                செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான ஒரு விஷயம் Data (தகவல்கள்). எவ்வளவு முடியுமோ அவ்வளவு தகவல்களை சேகரித்து, அதன் மூலமே செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை மேம்படுத்தி வருகின்றன நிறுவனங்கள். பெருநிறுவனங்கள் முதல் சிறுநிறுவனங்கள் வரை அனைத்து AI நிறுவனங்களும் பயனாளர்களின் தகவல்களை பெற நினைக்கும் நிலையில், தகவல் பாதுகாப்பிற்கு AI மூலமே தகவல் பாதுகாப்பை உறுதி செய்ய உழைத்து வரும் ப்ரோட்டானில் (Proton) முக்கியப் பங்கு வகித்து வருகிறார் ஆனந்த் விஜய் சிங்.

அம்பா கக், AI நவ் இன்ஸ்டிட்யூட்:

 

                ஒரு விஷயம் வளரும் போது ஊக்கம் எப்படி அவசியமோ, அதுபோல விமர்சனங்களும் அவசியம். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமும், அதனை உருவாக்கும் நிறுவனங்களும் அசுரவேகத்தில் வளர்ந்து வரும் நிலையில், அதன் தவறான செயல்பாடுகளுக்கு சாட்டையடி கொடுக்க வேண்டியதும் அவசியம். அந்த சாட்டையடிக்குத் தேவையான தகவல்களை வழங்குகிறது அம்பா கக்கின் AI நவ் இன்ஸ்டிட்யூட். AI தொழில்நுட்பம் மற்றும் அதன் நிறுவனங்கள் செல்லும் பாதை, அவை ஏற்படுத்தும் தாக்கங்களை ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டு வருகிறது AI நவ்.

துவாரகேஷ் படேல், துவாரகேஷ் பாட்கேஸ்ட்:

 

                AI குறித்து செய்திகள் வாயிலாக மட்டுமே தகவல்கள் வந்து சேரும் நிலையில், AI தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வருபவர்களின் மூலமாகவே அதனை நாம் தெரிந்து கொள்ள வழிவகை செய்து வருகிறார் துவாரகேஷ் படேல். துவாரகேஷ் பாட்கேஸ்ட் மூலமாக, சாம் பேங்க்மேன், இல்யா சுட்ஸ்கேவர் உள்ளிட்ட பல்வேறு AI நிபுணர்களைப் பேட்டி கண்டிருக்கிறார். தீவிரமான விஷயங்களையும், காஃபி குடிக்கும் நேர பேச்சு போல இயல்பாக, கேட்பவர்களுக்குப் புரியும் வகையில் இருப்பது தான் இவரது பாட்கேஸ்டின் சிறப்பு. ஜெஃப் பஸாஸ், மார்க் ஜூக்கர்பெர்க் உள்ளிட்ட தொழில்நுட்ப ஜாம்பவான்களின் பாராட்டைப் பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமன்தீப் சிங் கில்:

                உலகளவில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை செதுக்கக்கூடிய ஒரு முக்கியமான இடத்தில் அமர்ந்திருக்கும் இந்தியர் அமன்தீப் சிங் கில். ஐநா பொதுச் செயலாளரின் தொழில்நுட்பத் தூதுவராக செயல்பட்டு வருகிறார். தொழில்நுட்ப உலகில் என்ன விதமான மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன, அதற்கு என்ன விதமான நடவடிக்கைகள் எடுக்கலாம் போன்ற பரிந்துரைகளை ஐநா பொதுச் செயலாளருக்கு வழங்கும் முக்கிப் பொறுப்பில் இருக்கிறார் அமன்தீப் சிங் கில். இவர் முன்னாள் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

அஸ்வினி வைஷ்ணவ், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்:

                இந்தியாவின் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரான அஸ்வினி வைஷ்ணவின் பெயரும் டைம் AI 100 பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது. உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு இந்தியா. இங்கு எடுக்கப்படும் எந்தவொரு முடிவும், இங்கு மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு செயல்பாடுகளும் உலகளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், இந்தியா செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்க பெருமளவு முயற்சிகளை எடுத்து வருகிறார் இவர். இதன் மூலம் AI-யின் எதிர்காலத்திற்கும் முக்கியப் பங்காற்றுகிறார்

நந்தன் நிலேகனி, இன்ஃபோசிஸ் மற்றும் ஏக்ஸ்டெப் துணைநிறுவனர்:

 

                இந்தியாவின் முக்கியமான தொழில்நுட்ப ஆளுமைகளில் ஒருவர், இன்ஃபோசிஸ் (Infosys) மற்றும் ஏக்ஸ்டெப் (Ekstep) ஆகிய நிறுவனங்களின் துணை நிறுவனர் நந்தன் நிலேகனி. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பெருமளவு வளர்ச்சி பெற்றாலும், குறிப்பிட்ட மக்களால் அதனைப் பயன்படுத்த முடியவில்லை என்றால், அதனால் என்ன பயன்? இந்தக் கேள்வியை முன்வைத்து தொடங்கப்பட்ட முன்னேடுப்பே 'அத்புத் இந்தியா'. நந்தன் நிலேகனியின் ஏக்ஸ்டெப் நிறுவனத்தின் ஆதரவுடன் இந்த முன்னெடுப்பு முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் இந்தியாவில் உள்ள படிக்காத கடைக்கோடி பாமரனும் பயன்படுத்துவதை உறுதி செய்வதே இதன் நோக்கம். இதற்காக, வாய்மொழியாக பயன்படுத்தும் வகையில், அனைவரும் பேசும் மொழியை AI புரிந்து கொள்ளும் வகையில் தொழில்நுட்பம் மேம்படுவதை உறுதி செய்ய உழைத்து வருகிறது அத்புத் இந்தியா முன்னெடுப்பு.

அனில் கபூர்:

இந்தியாவின் முக்கியமான திரைப்படத் துறைகளில் ஒன்றான பாலிவுட்டின் முன்னணி நடிகர் அனில் கபூர். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திற்கும், அனில் கபூருக்கும் என்ன தொடர்பு?

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் அடிப்படையே நாம் கொடுக்கும் தகவல்களைக் கொண்டு, நம்முடைய தேவைக்கேற்ப புதிய தகவல்களை உருவாக்குவது தான். அது எழுத்தாக இருக்கலாம், புகைப்படமாக இருக்கலாம், ஆடியோவாக இருக்கலாம் அல்லது வீடியோவாக இருக்கலாம். AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவரைப் போலவே, அவரது நடவடிக்கைகளைப் போலவேயான பிம்பத்தை உருவாக்கிப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்தப் பயன்பாட்டிற்கு எதிராக வழக்கு தொடுத்து, அந்த வழக்கில் வெற்றியும் கண்டிருக்கிறார் அணில் கபூர்.

இதன் மூலம், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் எந்த வகையில் தவறான முன்னுதாரணமாக இருக்கலாம், அல்லது தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறார் அவர். இதன் காரணமாகவே டைம் AI 100 பட்டியலிலும் இடம்பிடித்திருக்கிறார்.

வினோத் கோஷ்லா, கோஷ்லா வென்சர்ஸ்:

உலகளவில் முன்னணி முதலீட்டாளர்களுடன் ஒருவர் வினோத் கோஷ்லா. AI மூலம் உலகயே மாற்றியமைக்கும் முடியும் என நம்பும் சிலரில் கோஷ்லாவும் ஒருவர். தன்னுடைய முதலீட்டு நிறுவனமான கோஷ்லா வென்சர்ஸின் மூலம் பல்வேறு AI நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறார் வினோத் கோஷ்லா. இவரது AI முதலீடுகளில் முக்கியமானதென்றால், 2019ல் ஓபன்ஏஐ என்ற நிறுவனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட 50 மில்லியன் டாலர் முதலீட்டைக் கூறலாம்.

ஆம், ஓபன்ஏஐ நிறுவனத்தின் முன்னணி முதலீட்டாளர்களுள் ஒருவர் வினோத் கோஷலா. மேலும், கடந்தாண்டு அந்நிறுவனத்திலிருந்து சாம் ஆல்ட்மேன் விலகிய போது, அவர் மீண்டும் நிறுவனத்திற்குள் வரவேண்டும் எனக் குரல்கொடுத்த முதலீட்டாளர்களில் முக்கியமானவரும் கூட. தன்னுடைய முதலீடுகள் மூலம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் வித்திட்டு வருகிறார் வினோத் கோஷ்லா.

 

   

 

"This Content Sponsored by SBO Digital Marketing.

Mobile-Based Part-Time Job Opportunity by SBO!

Earn money online by doing simple content publishing and sharing tasks. Here's how:

  • Job Type: Mobile-based part-time work
  • Work Involves:
    • Content publishing
    • Content sharing on social media
  • Time Required: As little as 1 hour a day
  • Earnings: ₹300 or more daily
  • Requirements:
    • Active Facebook and Instagram account
    • Basic knowledge of using mobile and social media

For more details:

WhatsApp your Name and Qualification to 9994104160

a.Online Part Time Jobs from Home

b.Work from Home Jobs Without Investment

c.Freelance Jobs Online for Students

d.Mobile Based Online Jobs

e.Daily Payment Online Jobs

Keyword & Tag: #OnlinePartTimeJob #WorkFromHome #EarnMoneyOnline #PartTimeJob #jobs #jobalerts #withoutinvestmentjob"

 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேர்மையை விதையுங்கள்" என்றால் "Be honest" அல்லது "Plant integrity" என்று அர்த்தம். இது ஒரு உருவகச் சொல். நேர்மையாக நடப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், நேர்மையான குணங்களை வளர்த்துக் கொள்ளவும் பயன்படுத்தப்படுகிறது

எவ்வளவு நெருங்கிய நண்பராக இருந்தாலும் இந்த 5 பர்சனல் விஷயங்களை மட்டும் சொல்லவே கூடாதாம்

விரக்தியாய் இருக்கீங்களா நண்பர்களே? அப்போ இதை படிங்க.. நொடியில் மாறும் மனநிலை..!நாம் என்னதான் திட்டமிட்டு வைத்திருந்தாலும் கடைசி நேரத்தில் சில சொதப்பல்கள் எதிர்பாராத விதமாக வந்துவிடும்.