இந்த 5 ரிலேஷன்ஷிப் கட்டுக்கதைகளை மட்டும் நம்பாதீங்க லைஃப் ஸ்மூத்தா போகும்
நம் மக்களுக்கு எப்பவுமே மற்றவர்களுக்கு அட்வைஸ் பண்ணுவதில் ஒரு அலாதியான ஆர்வம் இருக்கும். அதிலும் அடுத்த வீட்டு குடும்ப விஷயம், கணவன் மனைவிக்குள்ளே நடக்கும் விஷயத்தில் மூக்கை நுழைப்பது போன்றவற்றில் ஆர்வம் அதிகமாகக காட்டுவார்கள். அப்படி சில ஆர்வக் கோளாறுகள் தான் ரிலேஷன்ஷிப் பற்றி கீழ்வரும் கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுவார்கள். அந்த கட்டுக்கதைகள் என்ன, அதில் எதெல்லாம் சாத்தியமில்லாதது, நடைமுறையில் இல்லாதது என்று தான் இங்கு பார்க்கப் போகிறோம்.
நிஜ வாழ்க்கையின் எதார்த்தம் என்பது வேறு. ஆனால் சமூக வலைத்தளங்கள், ரீல்ஸ்கள், வாட்ஸ்அப் ஃபார்வர்டு மெசேஜ் என எல்லாவற்றிலும் செய்யும் அட்வைஸ்கள் இருக்கே! எதார்த்த வாழ்க்கையை மீறி அட்வைஸ்களும் கட்டுக்கதைகளும் உலாவிக் கொண்டு இருக்கிறது. அதுபோன்ற கட்டுக்கதைகளை நம்பலாமா கூடாது, எவையெல்லாம் கட்டுக்கதைகள் என்பது பற்றி தான் இங்கு பார்க்கப் போகிறோம்.
கணவன் மனைவிக்குள்ள சண்டை போட்டா தப்பு
கணவன், மனைவிக்குள்ளே சண்டையே வரக் கூடாது. அது
தான் பெஸ்ட் தம்பதிகளுக்கு அழகு என்று சொல்வார்கள்.ரெண்டு பேருக்கும் கொஞ்சம்கூட செட்டே ஆகலனா தான் இப்படி சண்டையா வரும். அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. எவ்வளவு ஹெல்தியான ரிலேஷன்ஷிப்பாக இருந்தாலும் சரி ர்களுக்குள்ளும் வாக்குவாதமெல்லாம் வரத்தான் செய்யும். அதை எப்படி கையாளுகிறோம் என்பது தான் முக்கியம்.
என்ன
வாக்குவாதம் சண்டையாக மாறாமல், பேச வேண்டியவற்றை அமைதியாக பேசுவது, சமாதானம் செய்வது ஆகிய பக்குவம் இருந்தாலே போதும்.
எப்பவுமே க்ளோஸா இருக்கணுமா?
திருமணம் ஆன ஆரம்ப காலத்தில் வேண்டுமானால் இருவரும் க்ளோஸாக இருப்பதும் எல்லாவற்றையும் ஷேர் செய்வதும் சிரமமில்லாத வேலையாக இருக்கலாம். அதன்பின் வாழ்க்கையில் நீங்கள் பிஸியாக ஆகும்போது எல்லா நேரத்திலும் க்ளோஸாக இருக்க முடியாது. சின்ன இடைவெளி இருவருக்குள்ளும் வரத்தான் செய்யும். இந்த சின்ன இடைவெளியினால் உங்கள் உறவு பலவீனமானது அல்ல. எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ உங்களுக்குள் நிறைய பேசிக்கொள்ளுங்கள். உறவை மேம்படுத்துவதற்கான உரையாடைலை செய்யுங்கள். அவ்வளவு தான்.
ஒரே நேரத்தில் இருவரும் ஓகே-யாக இருக்கணும்
கணவன் - மனைசி என்பதற்காகவே இருவரும் ஒரே நேரத்தில் ஒரே மனநிலையில் தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது. இந்த எதிர்பார்ப்பு சரியா என்று கேட்டால் அது தவறு. உதாரணத்துக்கு இரண்டு பேரும் ஏதோ சண்டை போட்டுக் கொள்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் ஒருவர் வேகமாக அதிலிருந்து வெளிவந்து விடலாம் அல்லது கோவமாக இருக்கலாம். அதனால் மற்றொருவர் கொஞ்சம் விலகி இருக்கலாம்.
இதை எப்படி தவறு என்று சொல்ல முடியும். ஒருவர் அந்த பிரச்சினையில் இருந்து மீளும்போது ரெண்டு பேருமே ஒரே மனநிலைக்கு வந்துவிட வேண்டும் என்று சொல்வது எப்படி சரியாக இருக்கும். ஒவ்வொருவருக்கும் அவரவர் மனநிலையை பொறுத்து ஒரு விஷயத்தில் இருந்து மீள நேரம் எடுக்கும்.
உடல் ரீதியான நெருக்கம்
கணவன் - மனைவி என்றாலே எப்போதும் உடல் ரீதியான நெருக்கத்துடனேயே தான் இருக்க வேண்டும் என்று சிலர் சொல்வார்கள். ஆனால் கணவன் - மனைவி என்பதற்காகவே எப்போதுமே இருவரும் உடல் ரீதியான நெருக்கத்துடனே தான் இருக்க வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. எல்லா தம்பதிகளுமே உறவுகளில் சில ஏற்ற, இறக்கங்களைச் சந்திக்கத் தான் செய்வார்கள்.
உடல் ரீதியான நெருக்கம் மட்டுமே உறவைத் தாங்கிப் பிடித்து விடுமா என்றால் இல்லை. ஒரு உறவு ஸ்டிராங்கா இருக்கணும்கா அதற்கு மரியாதை கொடுப்பதும் உணர்ச்சி ரீதியான பிணைப்பும் நீங்கள் கொடுக்கும் அரவணைப்பும் தான் முக்கியம்.
கணவன் - மனைவி எல்லா விஷயத்தையும் சேர்ந்து செய்வது
இப்படி
ஒரு கட்டுக்கதை ரொம்ப நாளா இருக்கு. அது என்ன தெரியுமா? திருமணத்திற்கு பின்பு என்ன செய்தாலும் அதை கணவன், மனைவி ரெண்டு பேரும் சேர்ந்து தான் செய்வார்கள், ஒருவருக்கு ஒருவர்
தெரியாம எதையுமே செய்யக் கூடாது என்று சொல்லிக் கொண்டு இருப்பார்கள். அப்படி இருந்தால் தான் உங்கள் ரிலேஷன்ஷிப் ஸ்டிராங்கா இருக்கும் என்று சொல்வார்கள்.
ஆனால்
அது உண்மையில்லை. உங்கள் ரிலேஷன்ஷிப் ஸ்டிராங்கா இருக்கணும்னா அதுக்கு 24 மணி நேரமும் உங்க பாட்னரும் நீங்களும் சேர்ந்தே தான் இருக்கணும்ங்கிற அவசியம்லாம் இல்ல.
சொல்லப்போனால்
ரெண்டு பேருக்குமே தனித்தனி பொழுதுபோக்கு, தனியாக நண்பர்கள், அவர்களுக்கென தனியே நேரம் ஒதுக்கிக் கொள்ளுதல் என்பது இருக்க வேண்டும்.
இறுதியாக,
மேலே
குறிப்பிட்ட இந்த ஐந்து வகையான திருமண வாழ்க்கை பற்றிய கட்டுக்கதைகளைத் தவிர்த்து விட்டு, உங்களுடைய பாட்னரும் நீங்களும் சேர்ந்து ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழும் வாழ்க்கை தான் சிறந்தது. எந்த கட்டுக்கதையும் நம்பாதீங்க. அன்பான, தன்னம்பிக்கையோடும் மரியாதையோடும் இருவருக்குமான போதிய நேரத்தையும் இடத்தையும் கொடுத்து வாழ்க்கையைக் கொண்டு செல்லுங்கள்
"This Content Sponsored by SBO Digital Marketing.
Mobile-Based Part-Time Job Opportunity by SBO!
Earn money online by doing simple content publishing and sharing tasks. Here's how:
- Job Type: Mobile-based part-time work
- Work Involves:
- Content publishing
- Content sharing on social media
- Time Required: As little as 1 hour a day
- Earnings: ₹300 or more daily
- Requirements:
- Active Facebook and Instagram account
- Basic knowledge of using mobile and social media
For more details:
WhatsApp your Name and Qualification to 9994104160
a.Online Part Time Jobs from Home
b.Work from Home Jobs Without Investment
c.Freelance Jobs Online for Students
d.Mobile Based Online Jobs
e.Daily Payment Online Jobs
Keyword & Tag: #OnlinePartTimeJob #WorkFromHome #EarnMoneyOnline #PartTimeJob #jobs #jobalerts #withoutinvestmentjob"



கருத்துகள்
கருத்துரையிடுக