கணவன் மனைவிக்குள் சண்டை நடக்கும்போது செய்யவே கூடாத 6 விஷயங்கள் செஞ்சா சண்டை பெருசாயிடும்

 




கணவன் - மனைவிக்குள் எப்போது மிகக் கடுமையான சண்டை வரும். இருவருக்கும் இடையே நிறைய தேக்கி வைத்த கோபங்கள், விட்டுக் கொடுத்துப் போகாமல் இருப்பது, இன்னும் நிறைய நிறைய பிரச்சினைகள் சேரும்போது தான் அவை விவாதங்களாகவும் சண்டைகளாகவும் மாறும். அப்படி சண்டை நடந்து கொண்டு இருக்கும் அது ஓரளவுக்கு தணிய வேண்டும் என்றால் நீங்கள் கீழே சொல்லப்போகும விஷயத்தை செய்யக் கூடாது.

                பொதுவாக கணவன் மனைவி சண்டைக்குள் வேறு யாரும் நுழையக்கூடாது என்று சொல்வார்கள் ஆனால் சில வீடுகளில் மூன்றாவது ஆள் உள்ளே நுழைந்து சண்டையை பெரிதாக்க தேவையில்லை இரண்டு பேரில் ஒருவர் செய்யும் சில விஷயங்களை போதும். இவர்களுக்குள் இன்னும் விரிசல் அதிகமாகும். அப்படி சண்டை வரும்போது இரண்டு பேரில் யாரோ ஒருவர் செய்யவே கூடாது விஷயங்கள் என்னென்ன என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்

அவமானப்படுத்துதல் கூடாது

                கணவன் மனைவிக்குள் அல்லது பார்ட்னருக்குள் சண்டை எவ்வளவு பெரிதாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அவற்றில் பயன்படுத்தும் வார்த்தைகள் உடல் மொழி அனைத்தையும் மிக கவனமாக பயன்படுத்த வேண்டும்.

கடுமையான சண்டையாக இருந்தாலும் கூட உங்கள் பார்ட்னரை நீங்கள் அவமானப்படுத்துதல் போன்று எதுவும் பேசக்கூடாது. அப்படி செய்யும் போது உங்கள் மீது இருக்கும் நம்பிக்கை அவர்களுக்கு குறைந்துவிடும்.

அது அவர்களுக்குள் மிக ஆழமான காயத்தை ஏற்படுத்தும். இதுவே உங்களுக்குள்ளான தொடர்பை துண்டிக்க காரணமாகிவிடும்.

பழைய விஷயங்களை தோண்டுவதால் ஏற்படும் பிரச்சனைகள்

எப்போதுமே கணவன் மனைவிக்குள் சண்டை வந்தால் அந்த சண்டைக்கான காரணம் என்ன அதை ஏன் வந்தது அதைப்பற்றி மட்டும்தான் பேச வேண்டும்.

அப்படி செய்யும்போது அந்தப் பிரச்சனை உண்டானதற்கான விஷயத்தை கண்டுபிடித்து அதை சரிசெய்து விட முடியும்.

ஆனால் பலரும் இதில் செய்யும் தவறு என்னவென்றால் இப்போது எதற்காக சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம் என்கிற காரணத்தை மறந்து விட்டு பழைய கதைகளையும் ஏற்கனவே நீ இப்படி செய்தாய் நீ இப்படி செய்தாய் என்று எல்லாவற்றையும் தோண்டி தோண்டி சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

அது சண்டையை பரிதாக்குமே தவிர கோபத்தை கூட்டமே தவிர குறைக்காது.

 


 

உடனே சமாதானம் அடைவது

சண்டைக்குப் பிறகு உடனே சமாதானம் அடைவது நல்லது தானே என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அது இயல்பாக நடந்தால் சரி ஏதேனும் கட்டாயத்திற்காக சமாதானமும் நடந்தால் அது சரியல்ல.

ஏனென்றால் சண்டை முடிந்ததும் விரைவாக ஒருவருக்கொருவர் சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்ற முயற்சி சரிதான். ஆனால் அதை சிறிது நேரம் கழித்து செய்யலாம். இல்லையென்றால் உடனுக்குடன் செய்யும்பொழுது பதட்டம் அதிகரிக்கும்.

முடிந்த வரையில் நீங்களோ அல்லது உங்கள் துணையோ சண்டைக்குப் பிறகு அவரவர் உணர்வுகளை வெளிப்படுத்திக் கொள்ள கொஞ்சம் நேரம் கொடுப்பது நல்லது.

மிரட்டல் துணியில் பேசுவது

இது பொதுவாக சில வீடுகளில் பெண்கள் செய்கிறார்கள். ஆனால் அது ஒரு சில நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும், கோபமாக இருக்கும். ஆனால் சில வீடுகளில் ஆண்கள் இதை செய்வார்கள்.

          அதாவது சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது நான் வீட்டை விட்டு போகிறேன். அல்லது நம்ம பிரிஞ்சு விடலாம், விவாகரத்து வாங்கிக்கலாம், உங்க அப்பா வீட்டுக்கு போயிடு, இந்த மாதிரியான வார்த்தைகளை பயன்படுத்தவே கூடாது.

குறை சொல்லிக் கொண்டிருத்தல்

இது பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் இருக்கும் பிரச்சனை தான் ஆனால் அது எந்த அளவு இருக்கிறது யார் அதிகம் செய்கிறார்கள். அந்த குறைகளை நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதை பொறுத்து இருக்கிறது.

ஆனால் எப்போதுமே கணவன் மனைவி மாறி மாறி குறை சொல்லிக் கொண்டே இருப்பது நல்லது அல்ல. சிலர் மிகச்சிறிய தவறுகளை கூட பெரிதுபடுத்திக் கொண்டே இருப்பார்கள். அப்படி நீங்களும் செய்கிறீர்கள் என்றால் நீங்கள் உங்கள் துணையை புரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம்.

சீரியஸான விஷயத்தை காமெடியாக எடுத்துக் கொள்வது

பெண்களைவிட ஆண்கள் இந்த தவறை அதிகமாகச் செய்கிறார்கள். வீட்டில் பெண்கள் சீரியஸான விஷயம் என்று நினைத்து ஒரு விஷயத்தை பேசிக் கொண்டோ அல்லது விவாதித்துக் கொண்டோ இருப்பார்கள்.

ஆனால் அதை ஆண்கள் சில சமயங்களில் காமெடியாக எடுத்துக் கொண்டு நகைச்சுவை சொன்னதுபோல் சிரிப்பார்கள். அதுபோல தான் நீங்களும் எல்லா விஷயத்தையும் ஜாலியாக எடுத்துக் கொள்கிறீர்கள் என்றால் இனி அதை செய்யாதீங்க.

உங்கள் பாட்னர் ஒரு விஷயத்தை சீரியஸாக பேசினால் நீங்களும் அதை முக்கியமானதாக, சீரியஸான விஷயமாகவே கேளுங்கள்.




இறுதியாக,

கணவன் மனைவிககுள் சண்டை வரும்போது மேலே குறிப்பிட்ட இந்த ஆறு வகையான தவறுகளை செய்யாமல் இருந்தாலே சண்டை வேகமாக முடிந்து இயல்பு நிலைக்குத் திரும்பி விடலாம்.


"This Content Sponsored by SBO Digital Marketing.

            Mobile-Based Part-Time Job Opportunity by SBO!

Earn money online by doing simple content publishing and sharing tasks. Here's how:

  • Job Type: Mobile-based part-time work
  • Work Involves:
    • Content publishing
    • Content sharing on social media
  • Time Required: As little as 1 hour a day
  • Earnings: ₹300 or more daily
  • Requirements:
    • Active Facebook and Instagram account
    • Basic knowledge of using mobile and social media

For more details:

WhatsApp your Name and Qualification to 9994104160

a.Online Part Time Jobs from Home

b.Work from Home Jobs Without Investment

c.Freelance Jobs Online for Students

d.Mobile Based Online Jobs

e.Daily Payment Online Jobs

Keyword & Tag: #OnlinePartTimeJob #WorkFromHome #EarnMoneyOnline #PartTimeJob #jobs #jobalerts #withoutinvestmentjob"

 

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேர்மையை விதையுங்கள்" என்றால் "Be honest" அல்லது "Plant integrity" என்று அர்த்தம். இது ஒரு உருவகச் சொல். நேர்மையாக நடப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், நேர்மையான குணங்களை வளர்த்துக் கொள்ளவும் பயன்படுத்தப்படுகிறது

எவ்வளவு நெருங்கிய நண்பராக இருந்தாலும் இந்த 5 பர்சனல் விஷயங்களை மட்டும் சொல்லவே கூடாதாம்

விரக்தியாய் இருக்கீங்களா நண்பர்களே? அப்போ இதை படிங்க.. நொடியில் மாறும் மனநிலை..!நாம் என்னதான் திட்டமிட்டு வைத்திருந்தாலும் கடைசி நேரத்தில் சில சொதப்பல்கள் எதிர்பாராத விதமாக வந்துவிடும்.